மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் மீட்கப்பட்ட 26 வது மரம் "அரசமரம்"


கோவை - பொள்ளாச்சி சாலையை விரிவுபடுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கு சாலை ஓரங்களில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ஓசை, சிறுதுளி, குறிச்சிக்குளம்  பாதுகாப்பு இயக்கம், பசுமை தேசம், ராக் அமைப்பு ஆகிய தன்னார்வ அமைப்புகள் இனைந்து மரங்களுக்கு மறுவாழ்வுப் பணியை மேற்கொண்டனர்.  இதன்மூலம் சாலை ஓரங்களில் உள்ள 25திற்கும் மேற்பட்ட மரங்களை மாற்று இடத்தில் நடப்பட்டுள்ளது. 



இந்நிலையில், பொள்ளாச்சி சாலையில் வெட்டப்படவிருந்த மரத்திற்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 26வது மரமாக அரசமரத்திற்கு மறுநடவு செய்யும் பணிகள் நேற்று காலை 8 மணி அளவில் துவங்கி, மாலை 5 மணிக்கு அரசமரம் மறுநடவு செய்யும் பணி நிறைபெற்றது. ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் வேருடன் அகற்றப்பட்ட இந்த மரத்தை வாகனத்தில் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு செல்லப்பட்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஃபைர்பேர்டு இன்ஸ்டிடியூடில் நடப்பட்டது. 



மரம் மீட்கப்படும் இடம் :-குறிச்சிக்குளம் அருகில் பொள்ளாச்சி சாலை.

மீட்கப்படும் மரம் :- அரசமரம்.

மரத்தின் வயது:- 45 வருடங்கள்.

மரத்தை மறுநடவு செய்யப்படும் இடம்:- ஃபைர்பேர்டு இன்ஸ்டிடியூட் செட்டிபாளையம்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...